News January 13, 2025
கல்லூரிகள், பல்கலை.களுக்கு அரசு புதிய உத்தரவு

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு படியாக, கல்லூரிகள், பல்கலை.களுக்கு உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பாதுகாப்பு முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்படியும், பேனிக் பட்டன், ரியல் டைம் டிராக்கர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 16, 2025
உருவ கேலிக்கு நச் பதில் கொடுத்த கயாடு

உருவ கேலி குறித்து நடிகை கயாடு லோஹரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு இருந்தால் தனித்தும் இல்லாமல் போய்விடும் எனவும், இன்றைய நிலையில், சோஷியல் மீடியாவில், உருவ கேலி குறித்த விமர்சனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் கூறினார்.
News November 16, 2025
பிஹாரில் திடீரென 3 லட்சம் வாக்காளர்கள் வந்தது எப்படி?

பிஹாரில் SIR-ன் முடிவில் 7.42 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தேர்தலின் போது திடீரென 3 லட்சம் உயர்ந்து 7.45 கோடியாக மாறியது எப்படி என காங்., கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ECI அதிகாரிகள், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள்கள் முன்பு வரை, வாக்குரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்ற விதி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தகுதியான வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
News November 16, 2025
USA வரிவிதிப்பால் ₹7,064 கோடி நஷ்டம்

அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவின் ரத்தின கற்கள், வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2024 அக்டோபரில் ₹26,237 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற்போது ₹19,173 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், பொம்மை பொருள்களின் ஏற்றுமதியும் வெகுவாக குறைந்துள்ளது. இந்திய பொருள்களின் அதிக விலை காரணமாக, அமெரிக்க வாடிக்கையாளர்கள் பிற நாடுகளின் இறக்குமதிகளை வாங்கி வருகின்றனர்.


