News November 20, 2024

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லையா?

image

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ரமணி (26) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்துக்கு முன்புதான் கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் டாக்டர் பாலாஜி கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார். தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால், அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Similar News

News November 12, 2025

சி.வி.சண்முகம் மீது பாயப்போகும் நடவடிக்கை

image

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு, மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலவசமாக ஆடு, மாடு, கொடுப்பது போல், ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும் இலவசமாக கொடுப்பாங்க என்று அரசு வழங்கும் இலவசத்தோடு பெண்களையும் ஒப்பிட்டு அவர் சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.

News November 12, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

கடந்த 2 நாள்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11,600-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 12, 2025

30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

image

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!