News April 9, 2024
புதிய எண்ணெய் வளங்களை கண்டறிந்துவரும் அரசு

இந்தியாவில் ஆண்டுதோறும் கச்சா எண்ணெய் பயன்பாடு 18% அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், “இந்தியா நாளொன்றுக்கு, 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை பயன்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி அளவை குறைக்க, அரசு புதிய எண்ணெய் வளங்களை கண்டறிந்து வருகிறது. விரைவில் எரிவாயு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்” என்றார்.
Similar News
News December 15, 2025
BREAKING: பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.2-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன.4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. தற்போது, புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது. புதுச்சேரியிலும் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 15, 2025
BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

வரலாறு படைக்கும் அளவிற்கு ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் கூட்டம் நடத்தப்படும் எனவும், குடிநீர், ஆம்புலன்ஸ் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 15, 2025
IPL: அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்

திறமையான வீரர்களை எந்த விலை கொடுத்தேனும் எடுத்துவிட வேண்டும் என IPL அணிகள் முனைப்பு காட்டும். அந்த வகையில், IPL ஏலத்தில் அதிகம் தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் போட்டோக்களையும் தொகையையும் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.


