News May 5, 2024
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு

சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில், தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
‘கும்கி 2’ படத்தை வெளியிட ஹைகோர்ட் தடை

பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி 2’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருந்தது. இதனிடையே, படத்தை தயாரிக்க பிரபுசாலமன் வாங்கிய ₹1.5 கோடி கடனை தராததால் படத்திற்கு தடை கோரி சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை HC ‘கும்கி 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
News November 12, 2025
USA-ல் போதுமான திறமைசாலிகள் இல்லை: டிரம்ப்

H-1B விசா கட்டண விவகாரத்தில் டிரம்ப் மனமிறங்கி உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவில் சில துறைகளுக்கு திறமையான இந்தியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் USA-வில் போதிய திறமையாளர்கள் இல்லை எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பல நாட்களாக வேலை இல்லாமல் இருக்கும் அமெரிக்கர்களை, சவாலான பணிகளில் உடனடியாக ஈடுபடுத்த முடியாது என கூறிய அவர், இதற்கு வெளிநாட்டினர்தான் தேவை எனவும் கூறியுள்ளார்.
News November 12, 2025
பிஹாரில் ஆட்சி மாற்றம் உறுதி: தேஜஸ்வி யாதவ்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி தான் நிச்சயம் வெல்லும் என்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளதாக தேஜஸ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த முறை நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். யாருடைய கணிப்பு வெல்லும் என அறிய நவ.14 வரை காத்திருப்போம்.


