News January 13, 2025

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை, மதுரை, திண்டுக்கல், குமரி, தென்காசி என அனைத்து மலர் சந்தைகளிலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகை ₹3,500க்கும், முல்லை 1 கிலோ ₹2,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜாதிமல்லி ஒரு கிலோ ₹1,300க்கும், காக்கட்டான் ₹1,600க்கும், சம்பங்கி ₹350க்கும் விற்பனையாகிறது.

Similar News

News November 8, 2025

நவம்பர் 8: வரலாற்றில் இன்று

image

*1680–தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்தநாள். *1910–தவில் கலைஞர் நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை பிறந்தநாள். *1927–மூத்த அரசியல்வாதி அத்வானி பிறந்தநாள் *1947–பாடகி உஷா உதுப் பிறந்தநாள். *1966–அரசியல்வாதி சீமான் பிறந்தநாள். *1987–எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமி மறைந்த நாள். *1989–நடிகர் அசோக் செல்வன் பிறந்தநாள். *2006–அரசியல்வாதி கா.காளிமுத்து மறைந்த நாள். *2016–PM மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த நாள்.

News November 8, 2025

இந்திய அணியில் சா பூ திரி விளையாட்டு?

image

ஒவ்வொரு போட்டிக்கும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் தேவையின்றி மாற்றப்படுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 1, 3-வது டி20-ல் சூர்யகுமார் ஒன் டவுன் வீரராக களமிறங்க, அதே வரிசையில் 2-வது டி20-ல் சாம்ஸன், 4-வது டி20-ல் துபே களமிறங்கினர். இதில் சஞ்சு 2 ரன்களுக்கு அவுட் ஆனதால், அடுத்த போட்டியில் டிராப் செய்யப்பட்டார். இப்படி செய்வது ஃபார்மில் இருக்கும் வீரர்களை பாதிக்கும் என்று ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.

News November 8, 2025

பிக்பாஸ் ஒரு ஆபாசமான நிகழ்ச்சி: வேல்முருகன்

image

விஜய் சேதுபதி நடத்தும் பிக்பாஸ் தமிழை மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான நிகழ்ச்சி என்று வேல்முருகன் விமர்சித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கும் தனக்கு எந்தவித தகராறும் இல்லை என்றும், இது குடும்ப உறவுமுறையை சிதைக்கும் நிகழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்தை அறிந்த பிறகே நிகழ்ச்சிக்கு தடை கோரி போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!