News November 11, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶அதிகாரம்: வினைத்திட்பம்
▶குறள் இயல்: அமைச்சியல் ▶குறள் எண்: 662
▶குறள் :
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
▶விளக்க உரை: இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.
Similar News
News December 8, 2025
ஹமாஸ் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம்

ஹமாஸை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா உடனான ஹமாஸின் உறவு தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மேலும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் நிவாரண அமைப்புக்கு நிதி வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை காரணமாக, ஹமாஸை இன்னும் தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்கவில்லை.
News December 8, 2025
மீண்டும் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படத்தில் SK

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ‘அயலான்’ படத்தை தொடர்ந்து இந்த படமும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாவதால், பெருமளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறதாம். அதனால், US-ஐ சேர்ந்த பிரபல நிறுவனம் இப்படத்தில் இணைந்துள்ளதாம்.
News December 8, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*உண்மையை சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி 2 மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால், நாம் பெறும் இன்பம் 2 மடங்காகும். *உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதில் பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.


