News May 14, 2024
நீதிமன்றத்தில் ஆஜராகிறார் இபிஎஸ்

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆஜராகிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இன்று ஆஜராகிறார்.
Similar News
News December 12, 2025
செங்கல்பட்டு: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
கேள்விகளுக்கு பதில் எங்கே? சு.வெங்கடேசன்

மதுரை, கோவை மெட்ரோ குறித்த கேள்விக்கு, மத்திய அரசு சரியான பதிலை அளிக்கவில்லை என MP சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும், மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை’ என்பது போல, PM E-Seva குளிரூடப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதில் கூறுவதாக விமர்சித்துள்ளார்.
News December 12, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று(டிச.12) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1,600 உயர்ந்து ₹98,000-க்கும், 1 கிராம் தங்கத்தின் விலை ₹200 அதிகரித்து ₹12,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரனுக்கு ₹160 மட்டுமே உயர்ந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


