News August 23, 2025
ECR சாலையில் மீனவர்கள் சாலை மறியல்

காலாப்பட்டில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாத இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News January 16, 2026
புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 16, 2026
புதுவை: அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. ஆகவே தேர்தல் பணியில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு, சட்டசபைத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக அரசு ஊழியர்களின் விவரங்களை 19-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்துத் துறைகளுக்கும் கணக்கு மற்றும் கருவூலக துறை மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 16, 2026
புதுவை: நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்

வாணரப்பேட்டை சேர்ந்தவர் பிரகாஷ். ஓட்டுநரான இவர், தனது நண்பரான பூமியான்பேட்டையைச் சேர்ந்த தமிழ்மணி, என்பவருடன் உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் ஜன.14 மாலை மது அருந்தியுள்ளார். அப்போது, மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த தமிழ்மணி, பிரகாஷை தகாத வார்த்தையால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் தமிழ்மணியை தேடி வருகின்றனர்.


