News October 11, 2025
இன்று மறந்தும் இவற்றை செய்து விடாதீர்கள்!

ஆன்மீக குறிப்புகளின் படி, ஒவ்வொரு நாளிலும் ஒரு ஒருசில குறிப்பிட்ட விஷயங்களை மறந்தும் செய்துவிட கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி சனிக்கிழமையில், எண்ணெய் பொருட்கள் வாங்கக்கூடாது *கசப்பு உணவுகளை சமைக்க கூடாது *நகம், முடி வெட்டக்கூடாது *வீடு துடைக்கவோ, கழுவவோ கூடாது *புது துணிகள் வாங்க வேண்டாம் *இறப்பு வீட்டிற்கு சென்றால், அதிக நேரம் இருக்க வேண்டாம் *திருஷ்டி கழித்து விடாதீர்கள். SHARE IT.
Similar News
News November 12, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

கடந்த 2 நாள்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11,600-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 12, 2025
30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News November 12, 2025
‘தற்குறி’ என சொல்லாதீங்க: எழிலன்

ஒரு சாராரை ‘தற்குறி’ என திமுகவினர் விமர்சிக்கின்றனர். இந்நிலையில், ‘தற்குறிகள்’ என விமர்சனம் செய்வது தவறான அணுகுமுறை என்று திமுக MLA எழிலன் தெரிவித்துள்ளார். நாம் அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை, உரையாடவில்லை; அது நம்முடைய தவறு என்று கூறினார். மேலும், அவர்கள் சங்கிகள் கிடையாது; அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசினால்தான் போலியான தலைவர்களைப் பற்றி உணர்வார்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்.


