News June 18, 2024

கிரிக்கெட்டில் அதிகமுறை “டக் அவுட்”டான வீரர் தெரியுமா?

image

இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 1992-2011 வரை 495 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 59 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இதன்மூலம் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வால்ஸ் (54), இலங்கை முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா (53) ஆகியோர் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளனர்.

Similar News

News January 20, 2026

கவர்னர் உரையே இனி இருக்காதா?

image

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

News January 20, 2026

உள்கட்சி அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

image

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் அளவிற்கு முக்கியத்துவம் வழங்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக பிரசார குழுவில் KAS-க்கு 3-ம் இடம் வழங்கப்பட்டிருப்பது, தனது தொகுதி மா.செ.விடம் பேச ஆனந்தின் அனுமதி பெறவேண்டிய நிலை, CBI விவகாரத்தில் கருத்தை கேட்காதது, தான் அழைத்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கவில்லை என பல விஷயங்களில் KAS அதிருப்தியில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

News January 20, 2026

டிரம்புக்கு பதிலடி கொடுத்த நார்வே PM

image

நோபல் பரிசு கிடைக்காததால் அமைதியை விரும்ப போவதில்லை; கிரீன்லாந்தை கைப்பற்றுவேன் என <<18896895>>டிரம்ப்<<>> கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நோபல் பரிசு தனியார் அமைப்பால் வழங்கப்படுவதாகவும், நார்வே அரசாங்கத்திற்கு அதில் பங்களிப்பு இல்லை என அந்நாட்டின் PM ஜோனஸ் கர் ஸ்டோர், டிரம்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க்குக்கு, நார்வே ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!