News June 18, 2024

கிரிக்கெட்டில் அதிகமுறை “டக் அவுட்”டான வீரர் தெரியுமா?

image

இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 1992-2011 வரை 495 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 59 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இதன்மூலம் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வால்ஸ் (54), இலங்கை முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா (53) ஆகியோர் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளனர்.

Similar News

News November 14, 2025

TN டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன்

image

சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவ.26 முதல் டிச.18 வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான TN அணியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாயாஜால சுழற்பந்து வீச்சால் அசத்தி வரும், வருண் சக்ரவர்த்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெகதீசன்,ஷாருக்கான், சாய் கிஷோர், நடராஜன், குர்​ஜப்​னீத் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

News November 14, 2025

தங்கம் விலை உயர்வு.. ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

image

தங்கம் விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் புகழ் பெற்ற கோவையில் மட்டும், போதுமான பணி ஆணைகள் கிடைக்காமல், பிற மாவட்டங்களை சேர்ந்த 10,000 பொற்கொல்லர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுப நிகழ்வுகளுக்காக நகை வாங்குபவர்களால் மட்டும் ஓரளவு வியாபாரம் நடப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

News November 14, 2025

TN-ல் டெலிவரி வேலை செய்யும் இளம் டாக்டர்கள்

image

`உனக்கு என்னப்பா டாக்டரா இருக்க, நல்லா சம்பாதிப்ப’ என இனி சொல்லாதீர்கள். ஏனென்றால் TN-ல் இளம் டாக்டர்களின் நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இளம் டாக்டர்களுக்கு ₹15,000 தான் சம்பளமாக கிடைப்பதாகவும், ₹30,000-ஐ எட்டுவதற்குள் 30 வயது ஆகிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேப்/பைக் டிரைவர், டெலிவரி மேன் வேலைகளுக்கும் MBBS படித்த இளம் டாக்டர்கள் செல்லும் நிலை உள்ளதாம்.

error: Content is protected !!