News November 21, 2024

பெர்த் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் தெரியுமா?

image

ஆஸிக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீரர் விராட் கோலியே அதிக ரன்கள் குவித்துள்ளார். WACA மற்றும் Optus மைதானங்களில் தலா 1 டெஸ்ட் போட்டி, அதாவது 2 டெஸ்ட் விளையாடி மாெத்தம் 259 ரன்கள் குவித்துள்ளார். அதில் 2018இல் Optus மைதானத்தில் விளாசிய 123 ரன்களும் அடங்கும். அதையடுத்து சச்சின் டெண்டுல்கர், WACA மைதானத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 226 ரன்கள் குவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

2026 IPL ஏலம் அறிவிப்பை வெளியிட்ட BCCI

image

IPL அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், மினி ஏலம் குறித்த அறிவிப்பை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. 173 வீரர்களை IPL அணிகள் தக்க வைத்த நிலையில், மீதமுள்ள 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. மொத்த அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி தொகை உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்கலாம்.

News November 16, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 16, ஐப்பசி 30 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். விஷ்ணுபதி புண்ணிய காலம், ஞாயிறு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: ஆதித்ய ஹிருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்.

News November 16, 2025

BJP, EC கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்: திருமா

image

BJP-ன் வாக்கு திருட்டை தடுப்பதற்கு TN மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிவுகளானது BJP, EC கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்ததுபோல TN-ல் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கவும், BJP, EC-ன் கூட்டு சதியை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!