News May 5, 2024
குடிக்க நீரில்லை; கோதுமை பீர் தேவையா?

வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் கொடுக்கவே வழியில்லாத திமுக அரசு கோதுமை பீர் அறிமுகப்படுத்துகிறது என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மதுபான வருமானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.
Similar News
News November 16, 2025
BJP, EC கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்: திருமா

BJP-ன் வாக்கு திருட்டை தடுப்பதற்கு TN மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிவுகளானது BJP, EC கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்ததுபோல TN-ல் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கவும், BJP, EC-ன் கூட்டு சதியை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
News November 16, 2025
ஆச்சரியமும் மர்மமும்: ஒரு கிராமத்தில் 450 இரட்டையர்கள்

ஒரு கிராமத்தில் 2 இரட்டையர்களை பார்ப்பதே அரிது. ஆனால், கேரளாவின் ‘கொதின்ஹி’ என்ற கிராமத்தில் 450 இரட்டையர்கள் உள்ளது ஆச்சரியத்தையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்தவர்களுக்கும் இரட்டையர்களே பிறக்கின்றனர். இதற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு ஆய்வாளர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், இன்னும் விடை தெரியாமலேயே உள்ளது.
News November 16, 2025
PAK-ல் இருந்து டிரோன் வழியாக வெடிபொருள்கள் கடத்தல்

பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் வழியாக வெடிபொருட்கள், போதை மருந்துகள் கடத்தப்படுவதை NIA கண்டுபிடித்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட விஷால் பிரச்சார் என்ற நபர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன் வழியாக வரும் ஆயுதங்கள், போதைப்பொருள்கள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.


