News June 1, 2024
ஓய்வு குறித்து மனம் திறந்த தினேஷ் கார்த்திக்

இன்னும் 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட, உடல் ரீதியாக தயாராக இருப்பதாக RCB வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். IPL ஓய்வு குறித்து மனம் திறந்த அவர், இதற்கு மேல் தன்னை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணிக்க மனதளவில் தயாராக இல்லை என்றும், மேலும், கிரிக்கெட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் கூறினார். மேலும், காயம் காரணமாக ஒரு போட்டியை கூட இதுவரை தவறவிட்டதே இல்லை எனப் பெருமிதம் கொண்டார்.
Similar News
News July 9, 2025
உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? இதை கவனிங்க

30 வயது என்பது நடுத்தர வயதை நாம் நெருங்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் மைல்கல். இந்த வயதில் ஆரோக்கியம் பராமரிக்க: ➤கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். ➤வேலைபளு காரணமாக உணவை தவிர்க்க கூடாது. ➤தினமும் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம் ➤தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி ➤மது, புகைப்பிடித்தல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➤குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேச வேண்டும். இது புத்துணர்ச்சியை கொடுக்கும்.
News July 9, 2025
வீட்டை காலி செய்ய வந்த அதிகாரி.. இறந்து கிடந்த நடிகை

பாக்., <<17004189>>நடிகை Humaira Asghar <<>>மரணம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டுக்கு ஓராண்டாக பணம் கொடுக்காததால் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, நடிகையை வீட்டில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் வந்தபோது துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் சடலமாக கிடந்தார். 15 நாளுக்கு முன்பு இறந்தது தெரிய வந்தது.
News July 9, 2025
புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நேரு. அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் வழங்கியுள்ளார்.