News April 18, 2024

ரூ.27க்கு ஆசைப்பட்டு ரூ.28,000 போச்சு

image

சண்டிகரில் ஊபர் டாக்ஸியில் பயணம் செய்த வாடிக்கையாளரிடம் ரூ.53 கட்டணத்திற்குப் பதிலாக ரூ.80 வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரிடம் கூடுதலாக ரூ.27 வசூலிக்கப்பட்டதை உறுதி செய்த நிலையில், அபராதம், இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுகள் என மொத்தமாக ரூ.28,000 செலுத்துமாறு ஊபர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

Similar News

News November 14, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தார் ஆட்சியர்

image

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய விடுமுறை ஈடுசெய்ய ஜன.3-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

Beef வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை!

image

நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தில், இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ல் அம்ரேலியில் சட்டவிரோதமாக மாடுகளை கொன்று 40 கிலோ இறைச்சியை வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

image

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?

error: Content is protected !!