News April 9, 2024

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்

image

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத் (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. கடந்த 6ஆம் தேதி கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் 10ஆவது நபராக மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வந்த அர்பாத் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

Similar News

News December 12, 2025

டிரம்ப்பின் ‘Core 5’ நாடுகள் குழுவில் இந்தியாவுமா?

image

பாரம்பரியமான G7 கூட்டமைப்பை ஓரங்கட்டி, இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பானை உள்ளடக்கிய ‘Core 5’ (C5) என்ற புதிய வல்லரசு குழுவை உருவாக்க, டிரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. USA-வின் எதிரி நாடுகளாக ரஷ்யா, சீனா கருதப்பட்டு வந்தாலும், சமீபமாக இந்த நாடுகளை சமாதானப் போக்கிலேயே USA கையாண்டு வருகிறது. இதனிடையே, இந்த நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் இல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

News December 12, 2025

தமிழ் நடிகை தற்கொலை.. குவியும் இரங்கல்

image

பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் சதீஷுடன் ஏற்பட்ட சண்டையால் சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மன அழுத்தத்தில் இருந்த ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமாக BP மாத்திரை சாப்பிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News December 12, 2025

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ₹11,718 கோடி ஒதுக்கீடு

image

2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ₹11,718.24 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும். 2026 ஏப்ரல் – செப்டம்பரில் வீட்டுக் கணக்கெடுப்பும், 2027 பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மேலும், இது 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.

error: Content is protected !!