News February 22, 2025
100 பெண்களுடன் டேட்டிங்.. பலே ஆசாமி கைது

டெல்லியைச் சேர்ந்த மனோஜ் கல்யாண், திருமண செயலி மூலம் கிடைத்த எண்களை கொண்டு 100 பெண்களுடன் பழகியுள்ளார். காவலாளியான அவர், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி எனக் கூறி, திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்து ஏடிஎம் அட்டை, கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ.3 கோடி வரை பணம் செலவழித்துள்ளார். 2 பெண்கள் அளித்த புகாரின்பேரில் விசாரித்த பாேலீஸ், கல்யாணை கைது செய்துள்ளது.
Similar News
News July 9, 2025
பெண்கள் நீண்ட நேரம் தூங்கினால் தான்..

தினமும் ஆண்களைவிட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுகிறதாம். ஆராய்ச்சிகளின் படி, பெண்கள் அதிகம் multi-task செய்பவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை நுட்பமாக கையாளுவதால், அவர்களின் மூளை அதிகமான ஆற்றலை பயன்படுத்துகிறது. இதனால், அவர்களுக்கு கூடுதல் தூக்கம் தேவை. தூக்கம் குறைந்தால், மன அழுத்தம், பதட்டம், இதய நோய் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்க எவ்வளோ நேரம் தூங்குவீங்க?
News July 9, 2025
பணத்தை வாங்கிட்டு அப்பெண் தான் ஏமாற்றினார்: யஷ் தயாள்!

பெண் ஒருவர் கொடுத்த <<16987106>>புகாருக்கு<<>> RCB வீரர் யஷ் தயாள் பதிலளித்துள்ளார். அந்த பெண்ணுக்கு தான் Iphone மற்றும் பல லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறிய யஷ் தயாள், அவற்றை அப்பெண் திரும்ப தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஷாப்பிங்கிற்கு செலவு செய்யவும், அப்பெண்ணின் உறுப்பினர்களின் சிகிச்சைக்கு தான் பணம் அளித்துள்ளதாக தெரிவித்த யஷ் தயாள், இவற்றுக்கு தன்னிடம் Proof இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
News July 9, 2025
₹1.23 லட்சம் சம்பளம்… டிகிரி போதும்

இந்திய கடலோர காவல்படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் 170 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்து, பின் டிகிரி முடித்த 21-25 வயதினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி & நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடக்கும். சம்பளம்: ₹56,100 – ₹1.23 லட்சம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 23. இணைய முகவரி: https://joinindiancoastguard.cdac.in/