News April 9, 2024

CSK கோட்டை இன்னும் சத்தமாக இருக்க வேண்டும்

image

CSK கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து ரசிகர்கள் கொடுக்கும் அன்பை நினைத்து நெகிழ்வதாக ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். இந்த அனுபவம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு முறை டாஸ் போடும்போது தோனிக்கு கொடுத்த அதே அன்பு தனக்கும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சேப்பாக்கம் எனும் சிஎஸ்கேவின் கோட்டை இன்னும் சத்தமாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News December 7, 2025

ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

image

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News December 7, 2025

சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

image

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்நாயகன் (MOS) விருது வென்றவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். SA-வுக்கு எதிரான ODI தொடரில் 302 ரன்கள் குவித்த கோலிக்கு MOS வழங்கப்பட்டது. இது அவருக்கு 20-வது விருதாகும். சச்சின் 19 முறை MOS வென்றிருந்தார். அதேபோல, ODI-ல் அதிகமுறை MOS வென்றவர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவுடன் 2-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.

News December 7, 2025

அலர்ட்.. 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க

error: Content is protected !!