News February 27, 2025
கிரிப்டோ கரன்சி மோசடி: தமன்னாவுக்கு தொடர்பா?

இணையதளம் மூலம் நடக்கும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அதிலும் உழைப்பு இல்லாமல் கிரிப்டோ கரன்சி மூலம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சி விளம்பரங்களுக்கு நிறைய பேர் பலியாகி வருகின்றனர். தற்போது அப்படியொரு கிரிப்டோ கரன்சி மோசடியில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. மோசடி கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் புதுச்சேரி போலீசார் விசாரிக்கவுள்ளனர்.
Similar News
News February 27, 2025
UPI மூலம் PF பணம். வந்தது ஒப்புதல்

PF பணத்தை GPay, PhonePe மாதிரியான UPI அப்ளிகேஷன்கள் மூலம் எடுப்பதற்கு CBT எனப்படும் அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, பணிகளைத் தொடங்கியுள்ள NPCI, ஏப்ரல் இறுதியில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று உறுதியளித்துள்ளது. அதேபோல, PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதியையும் அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
News February 27, 2025
பால் உற்பத்தியாளர் வங்கிக் கணக்கில் பணம்: அமைச்சர்

தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை, பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பால்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆவின் பால், தயிர், மோர், நெய், லஸ்ஸி, ஐஸ்க்ரீம் விற்பனையை அதிகரிக்கவும், பால் கொள்முதலை அதிகரிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
News February 27, 2025
29 வருஷத்துக்கு அப்புறம்! பாகிஸ்தான் பரிதாபங்கள்!!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை நடத்தும் பாகிஸ்தான், லீக் சுற்றுடன் வெளியேறிய பரிதாபம் அனைவரும் அறிந்ததே. 29 ஆண்டுகளுக்குப் பிறகு ICC தொடரை நடத்தும் PAK, CTஇல் ஒரு வெற்றி கூட பெறவில்லை. சோகமான விஷயம் என்னவென்றால், குரூப் A பிரிவில் ஒரே ஒரு புள்ளியை பெற்ற அந்த அணி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. மழை வந்ததால்தான் அந்த ஒரு புள்ளியும் கிடைத்ததாக, PAK அணியை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.