News November 11, 2024

மரத்துக்கு ‘ஆசிட்’ ஊற்றிய குரூரர்கள்..!

image

உலகிலேயே கொடூரமான உயிரினம் மனிதன் என்பதை அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஒரு சம்பவம்தான் கோவையில் நடந்துள்ளது. அங்குள்ள போத்தனூர் சாலை, கருப்பராயன் கோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்த 13 வயதான பூவரசு மரத்தின் அடிப்பகுதியில் துளையிட்டு ஆசிட் ஊற்றிய சில கயவர்கள், அதனை பட்டுப்போக செய்து விழச் செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களை என்ன செய்யலாம்?

Similar News

News November 16, 2025

பொங்கல் விடுமுறை.. வந்தது HAPPY NEWS

image

பொங்கல் விடுமுறையையொட்டி தமிழகத்தில் 500+ சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன் கருதி வழக்கமான ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்றும், மதுரை, திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெட்டிகள் அதிகரிப்பால் Waiting List பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 15, 2025

தவெக தொண்டர்களுக்கு N.ஆனந்த் அழைப்பு

image

SIR-க்கு எதிராக தவெக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என N.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். SIR பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் இருப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார் . SIR-க்கு எதிராக நாளை காலை 11 மணி அளவில் தவெக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வர முடியுமா?

image

மனிதனை ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒன்றுதான் cryopreservation. அதாவது, ஒரு சடலம் -196°C வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் புதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. ரத்தம் உறைதல், செல்களுக்கு சேதம் ஏற்படுவதைத் இது தடுக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இறந்த ஒருவரை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வந்தால், இந்த உடல் பயன்படுத்தப்படும்.

error: Content is protected !!