News September 3, 2025
கூட்ட நெரிசல் விவகாரம்: வாய் திறந்த விராட் கோலி!

கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ஜூன் 4-ல் நடந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று எனவும், மிகவும் கொண்டாட்டமான நாளாக இருக்க வேண்டியது, மிகவும் சோகமான நாளாக மாறிவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக தினமும் பிரார்த்திக்கிறேன் எனவும் இனி முன்னோக்கி செல்லும் போது பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
அன்புமணியை கைது செய்ய வேண்டும்: MLA அருள்

தன்னை ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களின் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட பாமக MLA அருள், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அன்புமணி தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியே அன்புமணி என்பதால், அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 8, 2025
12th Pass போதும், ரயில்வேயில் வேலை; அப்ளை பண்ணுங்க

RRB மூலம் 3,058 NTPC Non Graduates பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, சில பணிகளுக்கு டைப்பிஸ்ட் அவசியம். வயது வரம்பு: 18 – 30. சம்பளம்: Commercial Cum Ticket Clerk – ₹21,700. இதர பணியிடங்களுக்கு ₹19,900 அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News November 8, 2025
இந்தியாவில் அணு ஆயுத சோதனையா? ராஜ்நாத் பதில்

USA, ரஷ்யா, சீனா, வடகொரியா, பாக்., என பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனையில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து பதிலளித்த ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத சோதனை விவகாரங்களில், இந்தியா மற்ற நாடுகளின் கட்டளைக்கோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ முடிவு எடுக்காது என்று தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யும் என்றும் குறிப்பிட்டார்.


