News August 21, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சாட்சி விசாரணையை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு முடிந்ததால், சாட்சிகளை விசாரிக்கலாம் என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுமதியளித்து, விசாரணையை ஆக.28க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
Similar News
News January 16, 2026
BREAKING: முதல்வர் ஸ்டாலினின் 4 புதிய வாக்குறுதிகள்

திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்களுக்கு 4 புதிய வாக்குறுதிகளை அளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். *சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். *வறியோர் எளியோர் வாழ்வுயுர மனிதநேயத் திட்டங்கள். *இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். *தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News January 16, 2026
நாட்டின் வணிக தலைநகரை கைப்பற்றுவது யார்?

மகாராஷ்டிராவில் நேற்று மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜக தலைமையிலான <<18868876>>மகாயுதி கூட்டணியே<<>> பெரும்பாலான இடங்களில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
News January 16, 2026
மாட்டுப்பொங்கல் கோ பூஜை செய்வது எப்படி?

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. பசு மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். மாலை அணிவித்து அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும், நீண்ட கால மனக்குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.


