News May 4, 2024
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலி

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படமொன்று வைரலாகி வருகிறது. அதில், 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் அப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், ₹10 ஆயிரம் சம்பளம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பலரும் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இந்த அறிவிப்பு போலியானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
₹7,000 கோடி to ₹5,000 கோடி.. இழப்பை குறைக்கும் VI

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 2-வது காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர இழப்பை ₹5,524 கோடியாக குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹7,176 கோடியாக இருந்தது. அதேபோல், வருவாய் ₹11,194 கோடி (முன்பு ₹10,932 கோடி), ஒரு கஸ்டமரிடம் ஈட்டும் சராசரி வருவாய் ₹188-ஆக (முன்பு ₹166) உயர்ந்துள்ளது. முன்னதாக, வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியது.
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: கார் ஓனர் அடையாளம் தெரிந்தது

<<18252501>>டெல்லி குண்டு வெடிப்பில்<<>> ஈடுபடுத்தப்பட்ட கார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. HR26 CE 7674 என்ற பதிவெண் கொண்ட அந்த காரானாது, ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த முகமது சல்மான் என்பவருக்கு சொந்தமானது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, ஜம்மு & காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு காரை விற்றுவிட்டதாக தெரிவித்ததுள்ளார். அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
News November 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 516 ▶குறள்: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். ▶பொருள்: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.


