News November 19, 2024
நெல் விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய 15.11.2024 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில அரசு, மத்திய அரசை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் அளித்திட கோரிக்கை விடுத்தது. அதன்படி சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு கால அவகாசத்தினை 30.11.2024 வரை நீடிப்பு செய்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 13, 2025
கடலூர்: 10th படித்தவர்களுக்கு அரசு வேலை!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

கடலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
கடலூர்: வயிற்று வலியால் தொழிலாளி விபரீத முடிவு

கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் தொழிலாளி எட்வர்ட் பிரான்சிஸ்(55). இவர் வயிற்று வலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் மனமுடைந்த எட்வர்ட் பிரான்சிஸ் நேற்று(டிச.12) காலை 11 மணி அளவில் தனது வீட்டில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


