News April 23, 2025

காஷ்மீரில் கொல்லப்பட்ட 28 பேருக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் CM ஸ்டாலின் இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது அவர், இந்த பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது, பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார். பின்னர் சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News

News November 17, 2025

பாகிஸ்தானில் நொடியில் தப்பிய பயணிகள் ரயில்

image

பாக்.,கில் தனி நாடு கோரி பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்காக நசீராபாத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் வெடிகுண்டு இருந்துள்ளது. ஆனால், அது ரயில் சென்ற பிறகே வெடித்தது. இதனால் பயணிகள் உயிர்தப்பினர். சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருள்களை கைப்பற்றி, அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

ரயில்வேயில் 5,810 Vacancies: சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

image

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News November 17, 2025

BREAKING: முதல்வர் ஸ்டாலின் வீட்டில் பரபரப்பு

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள CM ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, போலீஸ் தலைமை இயக்குநர் இ-மெயிலுக்கு நள்ளிரவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதறிப்போன போலீசார் CM வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், சைபர் கிரைம் தீவிரமாக விசாரித்து வருகிறது.

error: Content is protected !!