News November 19, 2024
டாக்டர்களுக்கு ‘செக்’.. தமிழக அரசு அதிரடி ‘மூவ்’!

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணி நேரமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான டாக்டர்கள் உரிய பணி நேரத்தில் இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மேலும், நோயாளிகளையும் அவர்கள் முறையாக கவனிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், டாக்டர்களை கண்காணிப்பதற்காகவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
Similar News
News December 14, 2025
போண்டி தீவிரவாத தாக்குதல்.. PM மோடி கண்டனம்

ஆஸ்திரேலியாவின், <<18561882>>போண்டி கடற்கரையில்<<>> நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்திற்கு X-ல் கடும் கண்டனம் தெரிவித்துள்ள PM மோடி, இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News December 14, 2025
3-வது டி20: இந்திய அணி பவுலிங்

தரம்சாலாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20-ல், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. IND அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்சர் படேல், பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டி20-ல் IND 101 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் SA 51 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
News December 14, 2025
கீர்த்தனாவுக்கு ஊக்கத்தொகை வழங்குக: பா.ரஞ்சித்

கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கீர்த்தனாவுக்கு ஊக்கத்தொகை, அரசுப் பணி & வீடு வழங்க வேண்டும் என முதல்வரை பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு கேரம் சாம்பியன்ஷிப் வென்ற காசிமா, மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு மொத்தமாக ₹2 கோடி ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கியிருந்தார். ஆனால், கீர்த்தனாவுக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


