News September 28, 2025
CBI விசாரணை நடத்த வேண்டும்: OPS

கரூர் துயர சம்பவத்தை CBI விசாரிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்து நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வரைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 12, 2025
தோட்டா தரணியை வாழ்த்திய CM ஸ்டாலின், EPS

பிரான்ஸ் அரசின் ‘செவாலியே’ விருதை பெறவுள்ள தோட்டா தரணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Oxford-ல் ஒளிரும் பெரியாரின் ஓவியத்தை தந்த தோட்டா தரணிக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார். EPS தன் வாழ்த்து செய்தியில், கலை இயக்கத்தில் மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த தரணியின் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமொரு முத்தாய் ஜொலிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
News November 12, 2025
விலை தாறுமாறாக உயரப்போகிறது

சிமெண்ட் விலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலம், GST சீர்திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் சிமென்ட் விலை சராசரியாக ₹6 வரை குறைந்திருந்தது. தற்போது தேவை அதிகரித்துள்ளதால் நாடுமுழுவதும் சிமெண்ட் மூட்டைகளின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இதை உடனே ஷேர் செய்யுங்க..
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: வெளியான பரபரப்பு தகவல்கள்

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலில் குடியரசு தினம் மற்றும் தீபாவளி அன்று மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கைதான உமர் நபி மற்றும் உமர் முகமது ஆகியோர் செங்கோட்டையில் பலமுறை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக NIA கைதான 9 பேரிடம் விசாரணை நடத்திவருகிறது.


