India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வானூர், சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் ஹரிதாஸ்(22). இவர் நேற்று முன்தினம் மொரட்டாண்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரி என்ற பெண் மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஹரிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து ஆரோவில் போலீசார் நேற்று(மார்ச் 28) வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 28) நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 13 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் அளிக்க 8925533710 மற்றும் 8925533810 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், எனக் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதி, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று (மார்ச் 28) விழுப்புரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்றார். அப்போது பொன்முடியின் வாகனத்தில் பானை சின்னம் இருப்பதை பார்த்த திருமா, புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை வேட்பாளருக்கான மனுக்கள் சரிபார்த்தல் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமை தாங்கினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

விழுப்புரம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (மார்ச் 27) காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம், ராஜ் சாரிடபிள் எஜுகேஷன் காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்றம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டி எல்லீஸ் சத்திரம் சாலையில் தனியார் பீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு திடீரென தொழிற்சாலையில் உள்ள புகை போக்கி பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று, தீயை அணைத்தனர். மேலும், இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் 7வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரும் மனைவி உமாவும் நேற்று (மார்ச் 26) வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென இவர்களது கூரைவீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த மரக்காணம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு செல்ல ஏதுவாக நாளை (மார்ச் 27) கூடுதலாக 240 பஸ்களும், மார்ச் 28இல் 80 பஸ்களும், மார்ச் 29இல் 240 பஸ்களும் என மொத்தம் 660 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

விழுப்புரம் இஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (மார்ச் 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். 8 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் 72 மாணவ மாணவிகள் பணி நியமன ஆணையை பெற்றனர். இதில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.