Tamilnadu

News August 24, 2025

வாக்குப்பதிவு இயந்திரங்களை அய்வு செய்த ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்க. இதில், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கரன், நகராட்சி ஆணையர் ரமேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்கிற சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 24, 2025

தக்காளி விலை திடீர் உயர்வு

image

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால்,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

News August 24, 2025

கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் நாளை ரத்து

image

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆக.25(நாளை) காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (எண்: 66613) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) அன்றைய தினம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

புதுவை பாகூரில் சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம்

image

புதுச்சேரி மின்துறை & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் இணைந்து, பிரதம மந்திரி சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு சோலார் பேனல் மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் பாகூர் தனியார் நிலையத்தில் நேற்று நடந்தது. முகாமில், மின்துறை செயற்பொறியாளர்கள் (சோலார் பிரிவு) செந்தில்குமார், செயற்பொறியாளர் (தெற்கு) கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர்கள் ஆகியோர் இத்திட்டம் பற்றி விளக்கினர்

News August 24, 2025

ஆரல்வாய்மொழியில் ஆக.30-ல் சதுரங்க போட்டி!

image

காமரின் இன்டர்நேஷனல் பள்ளி, ஷைனிங் சேம்பியன் பள்ளி, இவான்ஸ் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் ஓப்பன் மற்றும் மாணவர்களுக்கான ராப்பிட் சதுரங்க போட்டி ஆரல்வாய்மொழி காமரின் பள்ளியில் ஆக.30-ந் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை கேடயம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 28ம் தேதிக்குள் evanschessclub.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News August 24, 2025

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மதுரை எம்பி சிறப்புரை

image

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா நிகழ்வில் நேற்று முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் எழுத்தாளர் அய்கோ தமிழர் வழிபாட்டு மரபு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 24, 2025

தஞ்சை: இளைஞர்கள் செய்த சுவாரசிய செயல்

image

தஞ்சாவூர் மாவட்டம் சிலத்தூர் அருகே உள்ள கிளாமங்கலத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வரும் பொழுது கிராமவாசிகள் மாப்பிள்ளையை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதால் பெண் வீட்டார் பெண் தர மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கூறி அப்பகுதி இளைஞர்கள், எச்சரிக்கை போஸ்டர் ஒட்டி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW

News August 24, 2025

சிறுமியிடம் அத்துமீறிய மளிகை கடைகாரர் கைது

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ஜமால் உசேன் (52). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில், அவரது கடைக்கு வந்த 11 வயது சிறுமிக்கு ஜமால் உசேன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஜமால் உசேனை இன்று (ஆகஸ்ட் 23) கைது செய்தனர்.

News August 24, 2025

பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி பாஜக சார்பில் நகர் பகுதியில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மகளிர் அணி நகர பொறுப்பாளர் விமலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உறுப்பினர் சேர்க்கை, கிளை அமைப்பது, பொறுப்பாளர் நியமனம், மங்கி பாத் நிகழ்ச்சி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

News August 24, 2025

இலவச கண் பரிசோதனை முகாம்

image

ராணிப்பேட்டை, ஆற்காடு தோப்புக்கனா அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் (ஆக.24) இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!