India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செல்வராஜ் தலைமையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழி சேந்தங்குடி பகுதியை சேர்ந்த கனிவண்ணன் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ புளியங்குடி நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி ஆகியோர் புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் நகரத் தலைவர் அப்துல்ரகுமான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நகர செயலாளர் ஷேக் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் ஆறு சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதியில் திமுக சார்பில் செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் என 4 முனை போட்டியாக காஞ்சிபுரம் தொகுதி களம் காண்கிறது. நான்கு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 23) நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்பாளர் பசுபதியை அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னையில் நோன்பு கஞ்சி குடிக்கும்போது பல் செட்டையும் சேர்த்து மூதாட்டி ஒருவர் விழுங்கியுள்ளார். உடனே மூதாட்டியின் உறவினர்கள் அருகிலுள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். நேற்று மூதாட்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பல் செட்டை வெளியே எடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர் .

போடி- மதுரை ரயில்பாதை சில மாதங்களுக்கு முன்பு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போடி-மதுரை விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போடி-மதுரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருப்புப்பாதையை மிக கவனமாக, கடந்து செல்ல தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.

சத்தியமங்கலத்தில் குன்றி கடம்பூா், குத்தியாலத்தூா், தாளவாடி மற்றும் பா்கூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முந்தையநாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.