India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 92 நடுநிலை/தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டு 26 பேர் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 12000 ரூபாய் மதிப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மதிப்பூதியம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.

தேனி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆர்.வி.ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களாக அறிவரசு பாண்டியன், ரேவதி, நிஷாந்த், தியாகராஜன், அஜித்குமார், பிரகாஷ், சதீஷ்குமார் உள்ளிட்டோர் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று தங்களது வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்களிடம் தாக்கல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் நாடளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று தெரிவித்தார் எனவே இதில் சேர விருப்பமுள்ளவர்கள் தாம்பரம் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜீவா வணிக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.27) பல்வேறு அரசியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மனிதநேயத்திற்கான அமைதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சர்ச்சில் துரை தனது வேட்பு மனுவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரமக்குடி தாலுகா கங்கைகொண்டான் மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் (75) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆக மொத்தம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மொத்தம் 6 பேர் களத்தில் உள்ளனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் டிஆர்பி ராஜா, எம்பி நடராஜன், மாநகர் மா.செயலாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது-பார்வையாளர் பண்டாரி யாதவ் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆகியோர் இருந்தனர்.

கடலூர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தெருவில் இருந்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் மாஜி அமைச்சருமான எம்.சி சம்பத் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் ஏராளமான அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தஞ்சாவூரில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களுக்கு, பொதுப் பாா்வையாளரான கிகேட்டோ சேமவை 93639 70331 என்ற எண்ணிலும், தேர்தல் செலவினங்கள் தொடா்பாக செலவின பாா்வையாளரான ஜன்வி திவாரியை 93639 62884 என்ற எண்ணிலும், சட்டம் – ஒழுங்கு மற்றும் சட்டத்துக்கு புறம்பான விதிமீறல்களுக்கு காவல் பாா்வையாளரான சரணப்பாவை 93639 72586 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.