India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு கூட்டு சாலைகள் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் நேற்று இரவு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நேற்று (மார்ச் 21) ராமநாதபுரம் வருகைபுரிந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு வைப்பறையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவி (விவிபேட்) ஒதுக்கீடு செய்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேரளம் தருமையாதீனத்திறகுச் சொந்தமான ஸ்ரீ பவானியம்மன் சமேத ஸ்ரீ சுயம்புநாதஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சிவன் மற்றும் அம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் தருமையாதீனம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலையும் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது உரிய ஆவணமின்றி ஏடிஎம் வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65.90 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1.1/2 பவுன் தங்க நகையை பறித்த கதிரியன்குளம் பகுதியை சேர்ந்த பிச்சை தேவர் மகன் ராஜசேகர் (38) என்பவரை நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் நேற்று(நேற்று) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அலுவலகத்திற்கான பந்தல்கால் நடும் பணியை கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தலைமை தாங்கி நேற்று (மார்ச் 21) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக, காங். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலை 2024-ஐ முன்னிட்டு கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான செலவின பார்வையாளர்கள்
தபஸ் லோத், பிரம்மானந்த் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மரியாதை நிமித்தமாக ஸ்ரீமடத்தில் சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆசி பெற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது என காஞ்சிபுரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

வேலூர் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்து சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சுப்புலட்சுமி சரவணன் குண்டர் சட்டத்தில் சிறை காவலை நீட்டிக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.