Tamilnadu

News March 23, 2024

செங்கல்பட்டில் மாணவி விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (39), ஜெயபிரதா (38) இவர்களுடைய மகள் ஜெய்மதிபாலா (12) ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். மார்ச்.22 தினமான நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவி ஜெய்மதிபாலா (12) மரகன்றுகளை வழக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை மிதிவண்டியில் சென்று மரகன்றுகளை வழங்கினார்.

News March 23, 2024

திருப்பூர்: பொதுத்தேர்வு… மகிழ்ச்சி மனநிலையில் மாணவர்கள்

image

கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தமிழ் எளிமையாகவும், ஆங்கில பாடம் சற்று கடினமாகவும், கணினி அறிவியல் எளிமையாகவும் வேதியல் சற்று கடினமாகவும், இயற்பியல் மிக மிக கடினமாகவும், கணிதம் சற்று கடினமாகவும் உயிரியல் எளிமையாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News March 23, 2024

பட்டுக்கோட்டை: உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

image

பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி ஆர் வி. எஸ் வேளாண்மை கல்லூரி சார்பில் நடைபெற்றது. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் பள்ளியை வந்தடைந்தது.

News March 23, 2024

காஞ்சிபுரம்: பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ

image

காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரர்மழலையர்  தொடக்கப்பள்ளியின் 21 ஆம் ஆண்டு விழா காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார். நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி பரிமளா அறிவழகன் செய்திருந்தார்.

News March 23, 2024

சென்னை: ஆட்டோ டிரைவர் கைது!

image

திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 2வது தெருவில் வசித்து வருபவர் பெருமாள்(58) ஆட்டோ ஓட்டுனர். இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இன்று வீட்டில் சோதனை செய்த போது ஹன்ஸ் 290, கூல் லிப், வி1 180 பாக்கு, உள்ளிட்ட வகைகளை பறிமுதல் செய்து இதை வைத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 23, 2024

நாமக்கல்: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

image

வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளதால் விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தையும் 04286 233079 எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் அலுவலர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 23, 2024

பாஜக வேட்பாளருக்கு முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சி தலைமை அறிவித்த நிலையில், புதுச்சேரிக்கு வருகை தந்த நமச்சிவாயத்தை பாஜக நிர்வாகிகள் நேற்று இரவு புதுச்சேரி எல்லைப் பகுதியில் மலர்கள் தூவி வாழ்த்துக்கள் கூறி வரவேற்றனர். தொடந்து பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

News March 23, 2024

தேர்தல் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

News March 23, 2024

கல்லூரி முதல்வரிடம் ரூ.66.25 லட்சம் மோசடி

image

குமரி ஆரல்வாய் மொழியைச் சேர்ந்த கல்லூரி முதல்வர் தினகரனிடம், கோவை மயிலேறிபாளையம் சுப்ரமணி என்பவர் தொடர்பு கொண்டு ரூ.1.25 லட்சம் கட்டினால் 3 ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.1.13 கோடி முதலீடு செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.47 லட்சம் பெற்ற நிலையில் மீதம் தரவில்லை. இப்புகாரின் பேரில் போலீசார் சுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 23, 2024

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

image

வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு மாதங்களாக மாலை நேர சிற்றுண்டி வழங்கிய முன்னாள் மாணவர்கள் சேதுராமன், ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!