Tamilnadu

News March 23, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், குணசேகரன். துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, வெங்கடேசன் அரக்கோணம் உட்கோட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்

News March 23, 2024

விருதுநகர்: தாக்கலாகாத வேட்புமனு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நேற்றுமுன்தினம் ஒரு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.நேற்று வேட்புமனு தாக்கலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே 3 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனுவில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்களை 1800 425 8970 , 04364 -211722 என்ற எண்ணிலும், திருவிடைமருதுார் தொகுதிக்கு 0435-240187, கும்பகோணம் தொகுதிக்கு 0435-2430101 , பாபநாசம் 0437-4222456 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News March 23, 2024

கன்னியாகுமரியில் ‘செல்பி’ பாயிண்ட்

image

100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ‘செல்பி’ பாயிண்ட் நேற்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்று பொதுமக்கள் மற்றும்
சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து செல்கிறார்கள்.

News March 23, 2024

சேலம்: திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

சேலம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ இக்கூட்டத்தில் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பகுதி வாரியாக தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

News March 23, 2024

100% வாக்களிப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு

image

கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்தல், உறுதிமொழி எடுத்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற பணிகளில் மகளிர் திட்ட அலுவலர் தலைமையில் க.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா மற்றும் அலுவலர்கள்  ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு துண்டு பிரதிகள் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய உறுதிமொழி ஏற்றனர்.

News March 23, 2024

100% வாக்குப்பதிவு வலியுறுத்தி கோலமிட்டு விழிப்புணர்வு

image

ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 29ஆவது வார்டு சம்பத்நகர் பகுதியில் குறைந்த வாக்கு சதவிகிதம் உள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் 100 % வாக்குகள் பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

பெரம்பலூரில் பங்குனி உத்திர திருவிழா

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவினை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான 7ம்நாள் திருக்கல்யாணம் நேற்று மாலை 6 மணி அளவில் மங்கள வாத்திய முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News March 23, 2024

தர்மபுரி: எஸ்பி அதிரடி ஆய்வு

image

பாராளுமன்ற தேர்தல் 2024ஐ – முன்னிட்டு தர்மபுரி தொகுதி முழுவதும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் சோதனை சாவடி மற்றும் வாக்கு சாவடிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News March 23, 2024

புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!

image

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்தியா கூட்டணி சார்பில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் , காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் இப்ராஹிம்பாபு , நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!