India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.58% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.35 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் 27ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 90.45% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.51% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

திருவண்ணாமலையில் இருந்து இன்று(மே 10) அதிகாலை அரூர் நோக்கி வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்து சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி, கடத்தூர் பேருந்து நிலையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற ஒரு கடைக்கும், புது ரெட்டியூர் சாலையில் புகையிலை விற்ற ஒரு கடைக்கும் தலா 25,000 விதம் 50 ஆயிரத்தை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா உத்தரவின் பேரில் , மொரப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நந்தகோபால் இன்று அபராதமாக விதித்தார். உடன் கடத்தூர் காவல் நிலைய போலீசார் இருந்தனர்.

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி கனவு என்ற வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எந்தெந்த படிப்பு படிக்கலாம், எந்தப் படிப்புக்கு கல்லூரியில் அதிக இடங்கள் உள்ளது என்பது குறித்து வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர்.

தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி ஆகிய இடங்களில் ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆம்னி பஸ், சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிய வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் என 125 வாகனங்களுக்கு ரூ.6,53,000 லட்சம் அபராதம் விதித்துள்ளார்.

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 4 ஆம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை(மே 9) முதல் 21 ஆம் தேதி வரை நீச்சல் பயிற்சி நடைபெறுகிறது. நீச்சல் பயிற்சி கட்டணம் ரூ.1,770 ஆகும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல் குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பாப்பிரெட்டிப்பட்டி, அருகே மெணசியை சேர்ந்தவர் அமல்ராஜ்(35). இவர் நேற்று முன்தினம்(மே 7) இரவில் தன் நண்பருடன் வெங்கடசமுத்திரத்திலுள்ள டாஸ்மாக்கில் மது வாங்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது சிலர் வரிசையில் நிற்காமல் மது வாங்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அமல்ராஜை பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சென்னப்பன் பாட்டிலாம் குத்தியுள்ளார். புகாரின் பேரில் நேற்று(மே 8) சென்னப்பனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி நகராட்சி உழவர் சந்தைக்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று(மே 8) இந்த சந்தையில் அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளிடம் அரசு முதன்மைச் செயலாளர் குறைகளை கேட்டு அறிந்தார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.