news

News April 10, 2024

அதிமுகவின் ஆணி வேர் ஆர்.எம்.வீரப்பன்

image

அதிமுகவை தொடங்குவதற்கு ஆணி வேராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அரசியல் முடிவுகளை மிக சிறப்பாக எடுக்கக்கூடிய அவர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்க அவருக்கு பெரிதும் ஊக்கமளித்தார். மேலும், எம்ஜிஆரின் அன்பையும் ஆர்.எம்.வீ முழுமையாக பெற்றிருந்தார் எனக்கூறிய அவர், அதிமுகவுக்கும், திராவிட இயக்கத்துக்கும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத துயரம் என்றார்.

News April 10, 2024

திமுக கூட்டணிக்கே எனது ஓட்டு: இயக்குநர் ரவிகுமார் அறிவிப்பு

image

அயலான் பட இயக்குநர் ரவிகுமார், “திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கே எனது வாக்கு” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இதுபோன்று வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மற்றும் மதுரை சிபிஐஎம் வேட்பாளர்களான சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு தனது ஆதரவை அவர் அளித்துள்ளார்.

News April 10, 2024

சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை

image

திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து விசிக கட்சி விளக்கமளித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், அங்கு வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டிற்கு நேற்று இரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் உள்ளிட்ட எதையும் கைப்பற்றவில்லை என அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

News April 10, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தமிழ் கலாச்சாரத்தை பாஜக மதிக்கிறது – பிரதமர் மோடி
➤ காவிரியில் கர்நாடக அரசை அணை கட்ட விடமாட்டோம் – செல்வப்பெருந்தகை
➤ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது – முதல்வர் ஸ்டாலின்
➤ திமுக பொய் கூறி வெற்றி பெற பார்க்கிறது – இபிஎஸ்
➤ ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி
➤ பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி

News April 10, 2024

ஆர்.எம்.வீ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

image

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் மறைவு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொது வாழ்விற்காகவும், எம்ஜிஆரின் கொள்கையை பிரபலப்படுத்தியதற்காகவும் அவர் என்றும் நினைவு கூறப்படுவார் எனத் தெரிவித்தார். மேலும், திரையுலகிலும், அரசியலிலும் சிறப்பாக பணியாற்றிய அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

பொறுமையாக இருந்து பெருமையாக வாழ்வோம்

image

எல்லோருக்கும் எல்லாமும் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார். பில்கேட்ஸ் 30 வயதில் உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50ஆவது வயதில் தான் தொடங்கிய அமான்சியோ ஓர்டேகா, 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

News April 10, 2024

ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை

image

பாஜக மறுமுறை ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டமே இருக்காது என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறிய அவர், பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் திட்டத்தால் சுத்தமாகி விட்டனர். பாஜக அரசால் மக்கள் அவதியில் உள்ளதாகவும் விமர்சித்தார்.

News April 10, 2024

நல்லதை விதைப்போம், அன்பை அறுவடை செய்வோம்

image

காரணம் இன்றி மனிதர்களை வெறுக்கும் போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத பதட்டத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது. வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி பயணிக்க முடியும்.

News April 10, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் – 10 | பங்குனி – 28
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 3:00 PM – 4:00 PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM,
6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 PM – 12:00 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶ திதி – துவிதியை

News April 10, 2024

ஹேமமாலினி குறித்து அவதூறு; காங்., பிரமுகருக்கு நோட்டீஸ்

image

ஹேமமாலினி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்., தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான பேச்சுகளில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக. இது குறித்து பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, “நான் பேசியதை வெட்டி ஒட்டியுள்ளார்கள், அவதூறாக எதையும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!