India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் நடித்துவரும் G.O.A.T படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடல், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.

ஏவுகணை, ட்ரோன் தாக்குதலுக்கு பிறகும் இஸ்ரேல் அமைதி காப்பதன் பின்னணியில், ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல்முறையாக நேரடியாக தாக்குதல் நடத்தியும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதை வைத்து ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிப்பதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது குழந்தைகளுடன் தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை கொண்டாடினர். பாரம்பரிய முறையில் உடை அணிந்து குழந்தைகளுடன் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள அவர்கள், ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிங்க் பேருந்துகளை ஸ்டாலின் பஸ் எனப் பொதுமக்கள் அழைப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார். நீலகிரியில் ஆ.ராசாவை ஆதரித்து பேசிய அவர், 2021இல் அடிமைகளை விரட்டியது போல, தற்போது அவர்களது எஜமானர்களை விரட்ட வேண்டும் என்ற அவர், கடந்த 10 வருடமாக தமிழகத்துக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறினார். முன்னதாக 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கனா’ தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தர்ஷனா அசோகன். சமீபத்தில் அத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று தர்ஷனாவிற்கும், அபிஷேக் என்பவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர். புதுமணத் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகிறது.

₹1.45 லட்சம் கோடி கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால் ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64% அடித்தட்டு மக்களிடம் இருந்தும், 33% நடுத்தர மக்களிடம் இருந்தும், 3% பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைப்பதாக தெரிவித்தார். மேலும், ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா? என்று அவர் சாடினார்.

அதிகாலை வேளையில் மின்தடையை ஏற்படுத்தி, திமுக பணப்பட்டு வாடா செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், காலை 4 முதல் 6 மணி வரை மின்தடை செய்யப்படுவதாகவும், இதையடுத்து வீடு வீடாக ₹500, ₹1,000 பட்டுவாடா செய்யப்படுவதாகவும் விமர்சித்தார். பணத்தை அளித்து வாக்கு பெறும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

வாக்காளர் தகவல்சீட்டு வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும், வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலை திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை போன்றவற்றை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.
Sorry, no posts matched your criteria.