news

News April 16, 2024

வியாழக்கிழமை முதல் வெப்பம் அதிகரிக்கும்

image

தமிழ்நாட்டில் வியாழக்கிழமை (18.04.2024) முதல் வெப்ப அலை வீசும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களாக மழை பெய்துவரும் நிலையில், வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கவுள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் ப்ரதீப் கூறியுள்ளார். தயாராக இருங்கள் மக்களே.

News April 16, 2024

223 ரன்கள் குவித்தது கொல்கத்தா

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய சுனில் நரைன் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை (109) பூர்த்தி செய்தார். ரகுவன்ஷி 30, ரிங்கு சிங் 20* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து RR அணிக்கு 224 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. RR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் சென், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

News April 16, 2024

குழந்தையை கொன்று தாய் தற்கொலை

image

ஈரோடு மாவட்டத்தில் 3 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த கோகிலவாணியின் (25) கணவர் சசிதரன் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். தனிமையை தாங்கிக் கொள்ள முடியாத கோகிலவாணி, பவானியில் லாட்ஜ் எடுத்து தங்கி தற்கொலை செய்திருக்கிறார். இந்த விபரீத முடிவுக்கு முன் குழந்தையையும் கொலை செய்திருக்கிறார்.

News April 16, 2024

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை ?

image

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி விதிமுறைகளை மீறுவதாக கண்டறியப்பட்டால், நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மோகன் லால் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியதற்கு எதிராக ஆதர்ஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

News April 16, 2024

“சதி செய்கிறார் பிரதமர் மோடி”

image

பிரதமர் மோடி மாநிலங்களை ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். பிரதமரானதும் மாநிலங்களுக்கு செல்லும் நிதியை எப்படி குறைக்கலாம் என்று மோடி சதி செய்ததாக ஸ்டாலின் பேசியுள்ளார். ED, CBIஐ வைத்து கட்சிகளை உடைப்பது, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, முதல்வர்களை கைது செய்வது ஆகியவைதான் மோடியின் செயல்கள் என்று முதல்வர் காட்டமாக பேசியிருக்கிறார்.

News April 16, 2024

சதம் அடித்தார் சுனில் நரைன்

image

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் அதிரடியாக ஆடி வரும் KKR வீரர் சுனில் நரைன் 49 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இது ஐபிஎல்லில் இவர் அடிக்கும் முதல் சதமாகும். இவரது அதிரடியால் KKR 16 ஓவரில் 184/3 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் மட்டும் நரைன் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார். இந்த சதத்தின் மூலம் KKR அணிக்காக விளையாடி சதம் அடித்த 3ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

News April 16, 2024

Apply Now: இன்னும் இரண்டு நாள்களே உள்ளது

image

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹35,400 – 1,12,400. தகுதியுள்ளவர்கள் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஏப்.18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News April 16, 2024

அதிரடியாக அரை சதம் கடந்தார் நரைன்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் அரை சதம் கடந்துள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தால் KKR அணி 12 ஓவர்கள் முடிவில் 125/2 ரன்கள் எடுத்துள்ளது. பிலிப் 10, ரகுவன்ஷி 30 ரன்னில் ஆட்டமிழந்தனர். நரைன் 70*, ஷ்ரேயஸ் ஐயர் 4* ரன்கள் அடித்துள்ளனர். குல்தீப் சென், ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

News April 16, 2024

நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து: 5 பேர் பலி

image

விஜயவாடா அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பெண்கள், 1 குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2024

சல்மான் கானை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே!

image

மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சந்தித்து பேசியுள்ளார். 2 தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத்தில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட இருவரும் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

error: Content is protected !!