India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL தொடரில் இன்றிரவு 7.30 மணி போட்டியில் ராஜஸ்தான் vs பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்திருக்கிறார். காயம் காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்காமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் மீண்டும் கேப்டனாகியிருக்கிறார்.
தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த CSK அணியை, விஜய் ஷங்கர் தனது அரை சதத்தால் காப்பாற்றியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 184 என்ற இமாலய இலக்கை துரத்தும் CSK அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போதைய நிலவரப்படி, CSK 16.4 ஓவர்களில் 116 எடுத்து விளையாடி வருகிறது. வெற்றி பெற 19 பந்துகளில் 68 ரன்கள் தேவை.
செய்ய முடியும். பெரும்பாலான முக்கிய வங்கிகள் இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை UPI செயலிகளுடன் இணைக்க அனுமதிக்கின்றன. கிரெடிட் கார்டு விவரங்களை செயலியில் கொடுத்து, UPI Pin-ஐ கொடுத்தால் போதும். ஒரு பரிவர்த்தனையை செய்ய, ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. UPI மூலம் எளிதாக கார்ட் வரம்பிற்குள் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக பலரும் க்ரீன் டீ குடிப்பார்கள். ஆனால், இந்த க்ரீன் டீயை அதிகமாக குடித்தால், அது பல உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு கல்லீரல் பாதிப்பு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் வரலாம் என சுட்டிக்காட்டுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சு தான்!
பாம்பனில் ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தை மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். 1914இல் அங்கு கட்டப்பட்ட பாலத்திற்கு பதிலாக கடலில் 2.07 கி.மீ. தூரம் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் தூக்கு பாலம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய பாலத்தை விட இது 3 மீட்டர் உயரமானது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மூலம் கட்டுமானம் நடந்துள்ளது.
DCக்கு எதிரான IPL போட்டியில் CSK அணி சடசடவென விக்கெட்டுகளை இழந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த DC, 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த CSKவின் தொடக்க வீரர்கள் ரச்சின் 3 ரன்களிலும், கான்வே 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ருதுராஜ் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த அணி 5.3 ஓவர்களில் 41 ரன்கள் மட்டும் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
கோடை தீவிரமடையும்போது, ஏசி சாதனங்கள் வெடிக்கும் விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஏசி இயந்திரத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக ஏசியில் தூசி அதிகம் சேர்வது, மின்சார பழுதுகள் மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தான் வெடித்து தீவிபத்து ஏற்பட முக்கிய காரணமாக உள்ளனவாம். ஆகவே, உடனே உங்கள் ஏசியை பராமரியுங்கள்; அச்சமின்றி தூங்குங்கள்!
*கண்டென்சர் காயிலில் தூசிகள் அதிகம் சேர்வதால், வெப்பம் வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சூடாகிறது *மட்டமான வயரிங், ப்ளக் பயன்பாடு, பழைய வயர்கள் பயன்படுத்துவது *வோல்டேஜ் ஏற்ற இறக்கம் *ஏசிக்கு உரிய கேஸ் வகைகளை பயன்படுத்தாமல், தவறான கேஸ் பயன்படுத்துவது. இந்த தவறுகளை முற்றிலும் தவிர்த்தால், ஏசி தீப்பிடிக்கும் விபத்துகளையும் தடுக்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி பொருளாதார முடிவுகளால் அந்நாட்டு பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக, வெள்ளிக்கிழமை அந்நாட்டு பங்குச்சந்தைகள் 5% மதிப்பினை இழந்தன. அதாவது, ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ₹770 லட்சம் கோடியை ($9 ட்ரில்லியன்) இழந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட பல நாட்டு சந்தைகளும் சரிவை சந்தித்து வருகின்றன.
ரயில்வேயில் 9,970 காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. இது லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பாகும். இதில் தெற்கு ரயில்வேயின் 510 பணியிடங்களும் அடங்கும். வேலைக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன் போன்ற ஏதேனும் ஐடிஐ படிப்பும் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18-30. சம்பளம் மாதம் ரூ.19,900. வேலைக்கு விண்ணப்பிக்க மே 9ஆம் தேதி கடைசி நாள். இந்தத் தகவலைப் பகிருங்க.
Sorry, no posts matched your criteria.