News October 1, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது

*ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலுக்கு வந்தது.
*ஆதார் சேவை கட்டணங்கள் உயர்வு.
*HDFC, PNB உள்ளிட்ட வங்கிகளில் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும்.
*PhonePe, GPay, Paytm போன்ற செயலிகளில் Money Request கோர முடியாது.
*ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவுகள் திறந்த முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். *வணிக <<17881244>>சிலிண்டர்<<>> விலை உயர்ந்தது.
Similar News
News December 15, 2025
சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

ஈரோட்டில் டிச.18 அன்று விஜய் ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. மேலும், 43 நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், வாகனத்தில் வேகமாக வரக் கூடாது, மின் கம்பங்களில் ஏறக் கூடாது என தவெக தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 15, 2025
டெல்லியில் காற்று மாசு உச்சம்: 61 விமானங்கள் ரத்து

டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமாகி வரும் நிலையில், பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 450-க்கு மேல் பதிவானது. இதன் எதிரொலியாக தலைநகரில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டதால், டெல்லி விமானநிலையத்தில் 61 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமான சேவைகளை உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
News December 15, 2025
பல்லியின் வால் எத்தனை முறை மீண்டும் வளரும் தெரியுமா?

பல்லிகள் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்தி தான் ‘ஆட்டோடோமி’ செயல்முறை. அதாவது வாலை துண்டித்து கொள்ளும் முறை. அப்படி துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் முழுமையாக வளர்ந்து விடும். இதை ரீஜெனரேஷன் என்கிறது அறிவியல். பல்லிகள் எத்தனை முறை வாலை துண்டித்தாலும், அது வளரும். அதற்கு எண்ணிக்கை வரம்பு இல்லை என்றாலும், பல்லியின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


