News February 21, 2025

உயிரைப் பறித்த Butterfly Challenge: பெற்றோருக்கு எச்சரிக்கை!

image

பிரேசிலில் 14 வயது சிறுவன் டாவி, ஆன்லைன் சேலஞ்சில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளான். பட்டாம்பூச்சியை கொன்று, தூளாக்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்வதே, பட்டர்பிளை சேலஞ்ச். இதை பார்த்து டாவியும், காலில் ஊசிமூலம் செலுத்திக் கொண்டான். அதன்பின் ஊசி குத்திய இடம் செப்டிக் ஆனதாலும், பட்டாம்பூச்சி உடலில் இருந்த நச்சுகளாலும் அவனின் உடல்நலம் பாதிக்கப்பட, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

Similar News

News July 9, 2025

செயல்படாத ஜன் தன் கணக்குகள் முடக்கம்?

image

வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் ஜன் தன் சேமிப்பு கணக்கை மத்திய அரசு அளிக்கிறது. இக்கணக்கில் குறைந்தபட்ச பணம் எதுவும் இருப்பு வைக்க வேண்டியதில்லை என்பதால் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பல ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும், அதை முடக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.

News July 9, 2025

ஸ்மார்ட் போன்கள் விலை குறைய வாய்ப்பு!

image

4G, 5G ஸ்மார்ட் போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. One Plus, iQOO, Leomi, Realme உள்ளிட்ட நிறுவனங்களில் பெருமளவு செல்போன்கள் தேங்கியுள்ளன. ரக்‌ஷா பந்தன், சுதந்திர தினம் தொடங்கி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் பண்டிகைகளுக்கு முன்பே கையிருப்பில் உள்ள செல்போன்களை சலுகையில் விற்பனை செய்துவிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் பட்ஜெட் என்ன?

News July 9, 2025

பரந்தூர் விவகாரம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு

image

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!