News November 12, 2025
Bussiness Roundup: ஆயுள் காப்பீடு பாலிசி மதிப்பு ₹34,007 கோடி

*பங்குச்சந்தை 2-அவது நாளாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. *GST 2.0 எதிரொலியாக ஆயுள் காப்பீடு பாலிசி மதிப்பு 12.1% அதிகரித்து ₹34,007 கோடியாக உயர்வு. *ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ₹88.57 ஆனது. *வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள தேவைகள் காரணமாக அரிசி ஏற்றுமதி உயரும் என எதிர்பார்ப்பு. *கடந்த 4 ஆண்டுகளில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் VIVO முதலிடம்.
Similar News
News November 12, 2025
எப்போதுதான் ரிலீஸ் ஆகிறது சூர்யாவின் கருப்பு?

சூர்யா, ஆர்.ஜே.பாலாஜியின் ‘கருப்பு’ பட ரிலீஸ் சில காரணங்களுக்காக தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. டிசம்பரிலாவது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் வழியில்லை என்றாகிவிட்டது. காரணம், நவ., இறுதியில் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தை இயக்குநர் லிங்குசாமி ரீ ரிலீஸ் செய்கிறார். அதன் பிறகு பொங்கலுக்கு விஜய், சி.கா படங்கள் மோதுகின்றன. எனவே, ஜனவரி இறுதியில் ‘கருப்பு’ ரிலீஸ் ஆகலாம் என்கின்றனர்.
News November 12, 2025
குண்டுவெடிப்புக்கு மூளையாக விளங்கியவர் இவரா?

ஃபரீதாபாத்தில் டாக்டர்களை மூளைச்சலவை செய்து டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியதாக இமாம் இர்ஃபான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் அரசு ஹாஸ்பிடலில் பணிபுரிந்த இவர், பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கம். அங்கு வந்த மற்ற டாக்டர்களுடன் பழகி, அவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கொள்கைகளை கற்பித்து மூளை சலவை செய்திருக்கிறார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் வெடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
News November 12, 2025
சி.வி.சண்முகம் மீது பாயப்போகும் நடவடிக்கை

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு, மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலவசமாக ஆடு, மாடு, கொடுப்பது போல், ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும் இலவசமாக கொடுப்பாங்க என்று அரசு வழங்கும் இலவசத்தோடு பெண்களையும் ஒப்பிட்டு அவர் சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.


