News August 18, 2025

BSF-ல் 3,580 பணியிடங்கள் அறிவிப்பு

image

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) உள்ள பெயிண்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான கான்ஸ்டபிள் (Tradesman) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: 3,588. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு/ ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹21,700 – ₹69,100. எழுத்து, உடல் திறன் உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.23. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News December 15, 2025

சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

image

ஈரோட்டில் டிச.18 அன்று விஜய் ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. மேலும், 43 நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், வாகனத்தில் வேகமாக வரக் கூடாது, மின் கம்பங்களில் ஏறக் கூடாது என தவெக தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 15, 2025

டெல்லியில் காற்று மாசு உச்சம்: 61 விமானங்கள் ரத்து

image

டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமாகி வரும் நிலையில், பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 450-க்கு மேல் பதிவானது. இதன் எதிரொலியாக தலைநகரில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டதால், டெல்லி விமானநிலையத்தில் 61 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமான சேவைகளை உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

News December 15, 2025

பல்லியின் வால் எத்தனை முறை மீண்டும் வளரும் தெரியுமா?

image

பல்லிகள் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்தி தான் ‘ஆட்டோடோமி’ செயல்முறை. அதாவது வாலை துண்டித்து கொள்ளும் முறை. அப்படி துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் முழுமையாக வளர்ந்து விடும். இதை ரீஜெனரேஷன் என்கிறது அறிவியல். பல்லிகள் எத்தனை முறை வாலை துண்டித்தாலும், அது வளரும். அதற்கு எண்ணிக்கை வரம்பு இல்லை என்றாலும், பல்லியின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!