News October 9, 2024
BREAKING: 8,932 பணியிடங்கள்.. TNPSC அறிவிப்பு

TNPSC குரூப் – 4 தேர்வு பணியிடங்களுக்கான எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 6,724 இடங்கள் அறிவிக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932ஆக அதிகரித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததை ஏற்று, TNPSC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Similar News
News November 10, 2025
Bussiness Roundup: EV கார் விற்பனை 57% அதிகரிப்பு

*அக்டோபரில் மின்சார கார்கள் விற்பனை 57.50%ஆக உயர்வு. *மத்திய அரசு அலுவலகங்களில் சேகரித்த பழைய பொருள்களை விற்றதன் மூலம் ₹800 கோடி வருவாய். *நாட்டில் நிலக்கரி உற்பத்தியை, அடுத்த ஆண்டில் 875 டன் வரை அதிகரிக்க திட்டம். *அந்நிய செலாவணி கையிருப்பு ₹61 லட்சம் கோடியாக சரிவு. *2030-க்குள் இந்தியாவின் டீப் -டெக் சந்தை மதிப்பு ₹2.66 லட்சம் கோடியாக உயரும் என தகவல்.
News November 10, 2025
பிரியாத பறவைகள் PHOTOS

சில பறவைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆயுள் முழுவதும் தங்கள் இணைகளுடனே சேர்ந்து வாழ்கின்றன`. அவற்றின் வாழ்வில் காணப்படும் நம்பிக்கையும், ஒருவரை ஒருவர் காக்கும் பொறுப்புணர்வும் நெகிழ்ச்சியடைய செய்கின்றன. இந்த இயற்கையில் அற்புதமான வரம் பெற்ற பறவைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க
News November 10, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மாற்றுக்கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மதிமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் சிவநாதன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு, மல்லை சத்யா மதிமுகவில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது சிவநாதனும் வெளியேறியுள்ளார்.


