News October 19, 2025
BREAKING: 1 கிலோ ₹3,000 வரை உயர்ந்தது

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 1 கிலோ மல்லிகை ₹3,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை ₹2,500, சாதிப்பூ ₹2,000, காக்கரட்டன் ₹1,500, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ், சம்பங்கி ஆகியவை தலா ₹200 வரை விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நீங்க எவ்வளவுக்கு பூ வாங்குனீங்க?
Similar News
News December 9, 2025
நாளொரு புகார்; பொழுதொரு அவதூறு: KN நேரு

திமுக அரசின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ED-ஐ ஏவி அதிமுக – பாஜக கூட்டணி அவதூறு செய்வதாக KN நேரு கூறியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் <<18501393>>₹1,020 கோடி ஊழல் புகார்<<>> தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பரப்பப்படுவதால் அதனை பற்றி கவலை இல்லை எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
News December 9, 2025
இறுதி கட்டத்தை எட்டிய SIR பணிகள்

தமிழகத்தில் 99.72% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. தமிழகத்தில் SIR பணிகள் நவ.4-ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் டிச.11-ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிச.16-ல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
News December 9, 2025
ராசி பலன்கள் (09.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


