News January 21, 2026
BREAKING வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி!

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலைகளை ஏறிச்சென்று, சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது மலை ஏறும் பக்தர்களுக்காக ஏற்பாடுகளை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News February 16, 2026
மதுக்கரை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பிரிவு மொடமாத்தி சுற்று பகுதியில் இன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா விவசாய நிலத்தில் முள் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 16, 2026
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News February 16, 2026
கோவை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)


