News October 10, 2025
BREAKING நெல்லை கல்லூரியை மூட நோடீஸ்; உணவக உரிமம் ரத்து

நெல்லை, திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி. கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தி, சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து.
Similar News
News November 7, 2025
மாநகர இரவு காவல் சேவை அதிகாரிகள் எண்கள்

திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் உதவி சேவை பணிக்கான அதிகாரிகளை விவரங்களை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளன. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை இரவு தொடர்பு கொள்ளலாம்.
News November 7, 2025
முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு இன்று முதல் நடைபெறுகிறது. குரூப் 2-வில் 50 காலிபணியிடமும். குரூப் 2ஏ-வில் 595 காலிபணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கூறினார்.
News November 7, 2025
வினாத்தாள் மாறியது குறித்து அதிகாரிகள் விசாரணை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று பிகாம் 3ம் ஆண்டு அரியர்ஸ் செமஸ்டர் தேர்வுக்கு மாணவரிடம் வழங்கப்பட்ட வினாத்தாள் மாறியது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கூறுகையில் சென்னையில் இருந்து வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் அந்த பார்சலை தேர்வு மையத்தில் பிரிப்பார்கள். குறியீட்டு எண் சரியாக இருந்த நிலையில் வினாக்கள் மாறியது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.


