News September 30, 2025
BREAKING: எண்ணூரில் கோர விபத்து- 4 பேர் பலி

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கோரவிபத்து ஏற்பட்டு 4 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியின்போது கம்பிகள் சரிந்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Similar News
News December 16, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
சென்னையில் கொடூரம்!

நொளம்பூரில் மேரி (70) வசித்து வந்தார். இவர் வீட்டிலிருந்து நேற்று சத்தம் வர, சுற்றத்தார் பார்த்த போது மேரி மயங்கிய நிலையிலிருந்தார். அப்போது மேரி அருகிலிருந்த ஏழுமலையை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேரியை மருத்துமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்க, போலீசார் ஏழுமலையிடம் விசாரணை செய்ததில் குடிக்க பணம் இல்லையென, மேரியை நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது.
News December 15, 2025
சென்னை: EB பில் நினைத்து கவலையா??

சென்னை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


