News November 19, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து அதிமுக மற்றும் OPS அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வரை OPS கூடவே இருந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் KKSSR முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல், திருவள்ளூர் அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News January 25, 2026
பாஜகவுக்கு 30 சீட்.. EPS போடும் கணக்கு

வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையைவிட கூடுதல் சீட்களை தர EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாஜக 40 சீட் கேட்ட நிலையில், 20 சீட் மட்டுமே என EPS கறார் காட்டினாராம். தற்போது பாஜகவின் நடவடிக்கையால் அமமுக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் உற்சாகத்தில் உள்ள EPS, 30 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
News January 25, 2026
மகளிர் உரிமைத் தொகை.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

1.30 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு மகளிரும் இதுவரை ₹29,000 பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனை தங்களது அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என ஒவ்வொரு மகளிரும் கூறுவதாகவும் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News January 25, 2026
இரவில் சமைத்த உணவை காலையில் சுட வைக்குறீங்களா?

இரவில் சமைத்த உணவு மீந்துவிட்டால், அதை காலையில் சுட வைத்து சாப்பிடும் வழக்கம் பல வீடுகளிலும் உண்டு. ஆனால், இப்படி சில உணவுகளை சுடவைத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு போன்றவற்றை கண்டிப்பாக சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என அறிவுறுத்துகிறார்கள். அடுத்த முறை கவனமா இருங்க!


