News August 6, 2025

BREAKING:நெல்லையில் அடுத்த கொலை

image

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே சங்கநேரியில் இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்ற பிரபுதாஸ் (27), என்ற பட்டியலின வாலிபர் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நண்பர் காயமடைந்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

நெல்லை: வினாத்தாள் மாறியதால் தேர்வில் குழப்பம்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பி.காம் அரியர் தேர்வில் வினாத்தாள் குழப்பம் ஏற்பட்டது. 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ‘மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்’ தேர்வுக்கு பதில் தவறுதலாக ‘ரீடைல் மார்க்கெட்டிங்’ வினாத்தாள் வழங்கபட்டது. பின்னர் சரியான வினாத்தாள் தரபட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு நடந்தது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கபட்டதாகவும் பல்கலை வட்டாரம் கூறியது.

News November 7, 2025

இன்று இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.6) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 7, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.6] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்ணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!